ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் அதிமுக சார்பில் திண்ணைப்பிரச்சாரம்.

ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் அதிமுக சார்பில் திண்ணைப்பிரச்சாரம்.
X
ஆரணி -சேத்துப்பட்டு சாலையில் உள்ள லட்சுமி நகரில் ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணைப்பிரச்சாரம் நடைபெற்றதில் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினார் தெற்குஒன்றியசெயலாளர் ஜி.வி.கஜேந்திரன்
ஆரணி -சேத்துப்பட்டு சாலையில் உள்ள லட்சுமி நகரில் ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணைப்பிரச்சாரம் நடைபெற்றது. திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் திமுக ஆட்சியின் அவலநிலை குறித்தும், அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரி பி.பாபு தலைமை தாங்கினார். 49வது வாரமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீதி வீதியாக நடந்து சென்று டீக்கடை, காய்கறி கடை, பழ கடை, மளிகை கடை, பேருந்து நிறுத்த பயணிகள் போன்ற இடங்களில் மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் நகர செயலாளர் அசோக்குமார் அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் மாவட்ட இணைச் செயலாளர் வனிதாசதீஷ், நகரமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சுதாகுமார், விநாயகம், மாவட்ட பிரதிநிதி துரை, மீனவராணி மாவட்ட செயலாளர் ஆனந்தன், இலக்கிய அணி நிர்வாகி சித்தேரி ஜெகன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் புங்கம்பாடி சுரேஷ், ஐ.டி பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story