போக்சோ வழக்கு ஆயுள் தண்டனையுடன் 05 ஆண்டுகள் சிறை

X
திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வேடசந்தூர் S. புதூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து(25) என்பவரை கூம்பூர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி வேடசந்தூர் சரக காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம், நீதிமன்ற தலைமைக் காவலர் ஆரோக்கிய சவரியம்மாள் மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி சீரிய முயற்சியால் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி காளிமுத்து என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 05 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,60,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்தாண்டு இதுவரை 28 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

