ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் 10 சவரன் தங்கச் சங்கிலியை வழிபறி செய்த மர்மநபர்கள்

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் 10 சவரன் தங்கச் சங்கிலியை வழிபறி செய்த மர்மநபர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் 10 சவரன் தங்கச் சங்கிலியை வழிபறி செய்த மர்மநபர்கள், *கொள்ளையர்கள் தங்கசங்கிலை பறிக்கும் போது, இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து பெண் படுகாயம் திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த அம்பூர் பேட்டை பகுதியை சேர்ந்த ஷீலா மற்றும் அவரது மருமகள் சிந்து ஆகியோர் இன்று, ஆம்பூரில் நடைப்பெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியிற்கு சென்று விட்டு, மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்ந போது, ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஷீலா மற்றும் சிந்து ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்த பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் ஷீலா கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க சங்கிலி பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர், அப்பொழுது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி ஷீலா கீழே விழுந்த போது அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது, உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் ஷீலாவை மீட்டு சிகிச்சையிற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அதனை தொடர்ந்து இந்த வழிப்பறி சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் இவ்வழிப்பறிச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து 10 சவரன் தங்கசங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்...
Next Story