உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
NAMAKKAL KING 24X7 B |27 Jan 2026 11:56 PM ISTஅதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சாலப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து பேசினார்.
நாமக்கல் அடுத்த சாலப்பாளையத்தில் அதிமுக மாநகரம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி போட்டியை தொடங்கி வைத்து பேசினார் அப்போது அவர் பேசுகையில் :- ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. காளைகளை அடக்கும் வீரர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் அற்புதமான விளையாட்டு ஆகும். கலாச்சார அடையாள விளையாட்டும் கூட. இந்த ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வைப்பதில் நான. பெருமைப்படுகிறேன். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் எதிர்பாராதவிதமாக காளைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலும், போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு இன்சூரன்ஸ் செய்து கொடுப்படும். காளைகளுக்கும் இன்சூரன்ஸ் செய்யப்படும் என்றார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் நாமக்கல், திருச்சி, சேலம், கரூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 800 காளைகள், 600 வீரர்கள் கலந்து கொண்டனர். சுழற்சி முறையில் வீரர்கள் அனுமதிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, மாடுபிடி வீரர்களுக்கும், காளைகள் வெற்றிபெறும் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், மெத்தை, சில்வர் பாத்திரங்கள், ரொக்க பணம், தங்கம், வெள்ளி காசுகள் வழங்கப்படுகின்றன, இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி. ஆர்.விஜயபாஸ்கர், பி. தங்கமணி, சரோஜா, கருப்பண்ணன், சிவபதி, முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர், சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story





