தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா ராசிபுரம் நகர கழகத்தின் சார்பில் நினைவஞ்சலி 1000.க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம்.

தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா ராசிபுரம் நகர கழகத்தின் சார்பில் நினைவஞ்சலி  1000.க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம்.
X
தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா ராசிபுரம் நகர கழகத்தின் சார்பில் நினைவஞ்சலி 1000.க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் புரட்சி கலைஞர் கருப்பு எம்ஜிஆர் என்று அழைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா நினைவஞ்சலி அனைத்து பகுதிகளிலும் அனுசரிக்க தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி அண்ணியார் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்டம் மாவட்ட செயலாளர் டி.எஸ். விஜய சரவணன் ஆலோசனை பெயரில் ராசிபுரம் தேமுதிக நகரக் கழகத்தின் சார்பில் நகர கழக செயலாளர் அ. இளையராஜா அவர்கள் தலைமையில் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் முன்பாக கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி குருபூஜை செய்து நினைவஞ்சலி செலுத்தினர். இதேபோல் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியிலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இரண்டாம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு பூக்கள் தூவி நினைவஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் நிர்வாகிகள் வழங்கினர். இந்த இரண்டாம் ஆண்டு குருபூஜை விழாவில் நகர பொருளாளர் நடராஜன் மற்றும் மாவட்ட பிரதிநிதி குண்டு செல்வம், வார்டு செயலாளர்கள் சிவக்குமார், கணேசன், ராஜ்குமார்,மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், 1.வது வார்டு நிர்வாகிகள் இளையராஜா, சுரேஷ், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சேகர், மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல், ராசிபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், ராசிபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர், பொதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் மூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் டி.என். ஆனந்த், கார்த்திகேயன், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கோபால், குப்புசாமி, கீர்த்தனா சக்திவேல், எம்ஜிஆர், சரண், தென்னரசு, செல்வராசு, புதுப்பட்டி சிவக்குமார், கார்த்தி, சுப்பிரமணி, முருகன், சாமி கண்ணு, சக்திவேல், கௌதம்,தேவராஜ், நாகராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story