பழையகோட்டையில் ரூ.11 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

பழையகோட்டையில் ரூ.11 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
X
பழையகோட்டை மாட்டு தாவணியில் ரூ.11 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டு தாவணியில் காங்கேயம் இன மாட்டு சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் காங்கேயம் இன மயிலை, செவலை பசு மாடுகள், பூச்சி காளைகள், இளங்கன்றுகள் என மொத்தம் 45 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த சந்தையில் அதிகபட்சமாக காளை கன்றுடன் காங்கேயம் இன மயிலை பசுமாடு ரூ.79 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.27 காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ.11 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
Next Story