பழனியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 11 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்

X
Dindigul King 24x7 |24 Jan 2026 6:50 AM ISTDindigul
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை பாலியல் தொல்லை செய்த வழக்கில் பழனி ராசாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (எ) முருகேசன்(44) என்பவரை பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் முருகன்(எ) முருகேசனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்
Next Story
