பெரியேரி ஊராட்சியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள்.

பெரியேரி ஊராட்சியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள்.
X
நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பெரியேரி ஊராட்சியில் பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய செயலாளருமான சி.சுந்தரபாண்டியன், மாலை அணிவித்து மரியாதை செய்து உறுதிமொழி ஏற்றார். உடன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சு.செல்வகுமார், கிளை செயலாளர்கள் சுப்பிரமணியன், வீரபத்திரன், குமார், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story