உங்களுடன் ஸ்டாலின் திட்ட பயனாளிகளுக்கு ரூ.1.29 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.பி வி.எஸ்.மாதேஸ்வரன்.
NAMAKKAL KING 24X7 B |30 Oct 2025 6:18 PM ISTநாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் பரமத்தி, கபிலர்மலை ஒன்றியங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட பயனாளிகள் 606 நபர்களுக்கு ரூ.1.29 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கபிலர்மலை கொங்கு திருமண மண்டபத்தில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி முன்னிலையில், பரமத்தி ஒன்றியம், பரமத்தி பேரூராட்சி மற்றும் கபிலர்மலை ஒன்றியம், பாண்டமங்கலம், பொத்தனூர், வெங்கரை பேராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 606 பயனாளிகளுக்கு ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 15.07.2025 முதல் 10.10.2025 வரை 3 கட்டங்களாக நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் பரமத்தி ஒன்றியம், பரமத்தி பேரூராட்சி பயனாளிகள் 259 நபர்களுக்கு ரூ.52.32 இலட்சம் மதிப்பிலும், கபிலர்மலை ஒன்றியம், பாண்டமங்கலம், பொத்தனூர், வெங்கரை பேரூராட்சி பயனாளிகள் 347 நபர்களுக்கு ரூ.76.82 இலட்சம் மதிப்பிலும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 மாற்றுத்திறனாளிக்கு ரூ.34,827/- மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.58,500/- மதிப்பிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 88 பயனாளிகளுக்கும், வருவாய்த்துறையின் சார்பில் 217 பயனாளிகளுக்கு ரூ.12.00 இலட்சம் மதிப்பிலும், பேரூராட்சிகள் துறையின் சார்பில் 65 பயனாளிகளுக்கும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 80 பயனாளிகளுக்கு ரூ.26,900/- மதிப்பிலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 98 பயானாளிகளுக்கு ரூ. 1,15,74,500/- மதிப்பிலும், வட்ட வழங்கல் துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கும், சுகாதாரத்துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு என மொத்தம் 606 பயனாளிகளுக்கு ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பி.எஸ்.லெனின், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சு.சுந்தரராஜன் உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story


