சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன விளையாட்டு அரங்கம்

சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன விளையாட்டு அரங்கம்
திருப்பத்தூர் மாவட்டம் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன விளையாட்டு அரங்கம் கட்டுமான பணிகள் துவங்கிய வறண்ட பூமியில் ஆயிரம் அடி தோண்டினாலும் தண்ணீர் கிடைக்காத சவாலான நிலையில் 60 அடியில் தண்ணீர் பீயிச்சி அடித்ததால் பொதுமக்கள் ஆச்சரியம். அரசு அலுவலர்கள் மகிழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில் நிலையம் அடுத்த ராஜீவ் காந்தி நகர் அருகே உள்ள சுமார் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓடுதளம் நீச்சல் குளம் இறகு பந்து விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் நவீன விளையாட்டு அரங்கம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு வட உள் மாவட்டத்தில் உண்டான திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 டிகிரி ஃபாரன் ஹீட் அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இவ்வளவு பெரிய மதிப்பீட்டில் நவீன விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான அடிப்படை தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதேபோன்று ஆயிரம் அடி தோண்டினாலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் எங்கும் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையில் நவீன விளையாட்டு அரங்கம் கட்டப்படும் வறண்ட பூமியில் ஆழ்துளை கிணறு போடும் பணி துவங்கிய போது 60 அடியில் தண்ணீர் பீச்சி அடித்ததால் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். துரை சார்ந்த அலுவலர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனென்றால் சுமார் 40 வருடங்களாக இந்த அளவுக்கு குறைவான அடி ஆழத்தில் தண்ணீர் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story