நாகர்கோவிலில் 1500 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

நாகர்கோவிலில்  1500 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
X
60 ஆயிரம் அபராதம்
நாகர்கோவில் மாநகராட்சி மாநகர் நல அதிகாரி டாக்டர் ஆல்பர் மதியரசு தலைமையில் குழுவினர் நாகர்கோவில் கனகமூலம் சந்தை மற்றும் ஒழுகின சேரி அப்டா மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஐந்து கடைகளில் 1500 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், பைகள் முதலியன பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு ரூபாய் 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வடசேரி கனகமூலம் சந்தையில் சோதனையில் ஒரு கடையில் 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடை சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக மாநகர நல அதிகாரி டாக்டர் ஆழ்பர் மதியரசு கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இக்குழுவினர் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணித்து வருகிறோம். விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Next Story