சாணார்பட்டி அருகே விற்பனைக்காக பைக்கில் கஞ்சா கடத்திய 16 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது - 1.1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்

X
Dindigul King 24x7 |4 Jan 2026 6:59 PM ISTDindigul
திண்டுக்கல் சாணார்பட்டி காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் பொன் குணசேகரன் தலைமையில் சார்பு ஆய்வாளர் வேலுமணி மற்றும் காவலர்கள் கோபால்பட்டி அருகே வடுகபட்டி பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பைக்கில் விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்த மஞ்சநாயக்கன்பட்டி சேர்ந்த கருப்பன் மகன் தாமரைக்கண்ணன்(21), கோபால்பட்டி விளக்கு ரோடு பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் முத்துக்குமார்(19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story
