தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19ஆம் தேதி நடக்கிறது!

X
புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்துடன் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ டிப்ளமோ போன்ற கல்வி தகுதி உடைய 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சுயவிவரம் குறிப்பு: ஆதார் அட்டை மற்றும் கல்விச் சான்று நகலுடன் கலந்து கொள்ளலாம். மேலும் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் www.tnprivatejobs.in.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் இத்தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
Next Story

