பெரியவளையம் முதல் கழுவந்தோண்டி கரம்பன் வாரி வரை 19.28 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை ஏரி புணரமைப்பு பணிகளை தொடங்கி வைத்த ஜெயங்கொண்டம் எம் எல் ஏ

X
அரியலூர், ஜூன்.8- பெரியவளையம் முதல் கழுவந்தோண்டி வரை ரூ 9.48 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை, மற்றும் ரூ 5.50 லட்சம் மதிப்பீட்டில் பெரியவளையம் சித்தேரியை புனரமைக்கும் பணி ரூ 4.30 லட்சம் மதிப்பீட்டில் பெரியவளையம் அரங்கநேரியை புனரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 9.48 லட்சம் மதிப்பீட்டில் பெரியவளையம் முதல் கழுவந்தோண்டி வரை மெட்டல் சாலை அமைக்கும் பணியையும், ரூ 5.50 லட்சம் பெரியவளையம் சித்தேரியை புனரமைக்கும் பணி, ரூ 4.30 லட்சம் மதிப்பீட்டில் பெரியவளையம் அரங்கநேரியை புனரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க. கண்ணன் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகானந்தம், பொறியாளர் குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம், ஒன்றிய நிர்வாகி சிவப்பிரகாசம் உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

