காதல் தோல்வியால் பிளஸ்-2 மாணவி தற்கொலை-பொள்ளாச்சியில் பரபரப்பு !

காதல் தோல்வியால் பிளஸ்-2 மாணவி தற்கொலை-பொள்ளாச்சியில் பரபரப்பு !
X
பிளஸ்-2 மாணவி, காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது 17 வயது மகள் சரிகா, பிளஸ்-2 மாணவி, காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரிகாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 21 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக அந்த வாலிபர் சரிகாவுடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்த சரிகாவுக்கு, காதலிக்க மறுத்து அந்த வாலிபர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த சரிகா, வீட்டில் தனியாக இருந்தபோது சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், காதல் தோல்வியாலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story