நன்னிலத்தில் இரவு 2 மணி நேரம் மின் தடை

நன்னிலத்தில் இரவு 2 மணி நேரம் மின் தடை
X
அறிவிப்பு இல்லாமல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நன்னிலம் பகுதியில் மின்தடை
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வணிகர்கள் என அனைத்து தரப்புமக்களும் கடும் அவதி அடைந்துள்ளார்கள்.. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் நன்னிலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மாப்பிள்ளைக்குப்பம், ஆண்டிப்பந்தல், நல்லமாங்குடி, சன்னாநல்லூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர் மின் தடை ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் பத்து முறைக்கு மேலாக மின்சாரம் விட்டு விட்டு வந்ததாகவும், தற்பொழுது முற்றிலுமாக மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகிறார்கள். மின்வாரிய அதிகாரிகள் சரிவர பதில் அளிப்பதில்லை எனவும் தொடர்ந்து.. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு இவ்வாறு தான் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் வணிகர்கள் கடும் பகுதி அடைந்து வருவதாகவும், இது குறித்து பலமுறை மின்சார வாரிய அதிகாரிகளிடம் பேசியும் அவர்கள் சரிவர பதில் சொல்லவில்லை.. எனவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.
Next Story