சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் இறந்தனர்

சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் இறந்தனர்
X
போலீசார் விசாரணை
சேலம் சூரமங்கலம் புதுரோடு இந்திராநகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 45), கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு புதுரோடு ரவுண்டானா அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது இரும்பாலையில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் தாரமங்கலம் அருகே உள்ள பெரிய காடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (60). இவர் நேற்று இரவு சிக்கம்பட்டி பஸ் நிறுத்தத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முத்துசாமி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முத்துசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story