சேலம் அருகே 2-வது கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை

X
சேலம் அருகே வலசையூர் சுந்தர்ராஜன் காலனியை சேர்ந்தவர் மேனகா (வயது 43). இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், மேனகா கணவரை பிரிந்து செல்வம் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் முதல் கணவருடன் வசித்து வருகின்றனர். மேனகா கைத்தறி வேலைக்கு சென்று வந்தார். இதனிடையே, 2-வது கணவர் செல்வம் மது அருந்திவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மேனகா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் உறவினர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், செல்வம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த மேனகா வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே வரும்வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

