மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது

X
திண்டுக்கல் அருகே வெளிமாநில மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்த ஜெயராகவன் (எ) சரவணன்(45), ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த பூபதிராஜ்குமார்(45) ஆகிய இருவரும் ஜெயராகவன் வீடு, வீட்டின் கார் செட் ஆகிய பகுதிகளில் உயர் ரக வெளிநாடு மதுபான பாட்டில்கள், மிலிட்டரி மற்றும் வெளி மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 789 வெளிநாடு மதுபான பாட்டில்கள் மிலிட்டரி மற்றும் வெளி மாநில மதுபான பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

