பழனியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

X
Dindigul King 24x7 |29 Dec 2025 7:27 AM ISTDindigul
திண்டுக்கல் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பழனி, திண்டுக்கல் ரோடு ஐஸ்வர்யா மருத்துவமனை அருகே கஞ்சா விற்பனை செய்த கவாஸ்கர்(36) என்பவரையும் பழனி பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்த ரவீந்திரன்(26) என்பவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
Next Story
