அதிமுக-பாஜக கூட்டணியால் திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் - கி.வீரமணி

X
அதிமுக-பாஜக கூட்டணியால் திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி. தஞ்சாவூா் வல்லம் பெரியாா் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, அண்ணா திமுகவாக தொடங்கப்பட்ட அதிமுகவின் கதி இப்போது அமித்ஷா திமுகவாக ஆகிவிட்டது. செய்தியாளா் சந்திப்பில் அமித்ஷாதான் பேசினாரே தவிர, எடப்பாடி பழனிசாமி மௌனமாகவே இருந்தாா். எந்த நிலையிலும் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என கூறியவா் எடப்பாடி பழனிசாமி. பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என கூறிய ஜெயலலிதாவின் வாக்குறுதியிலிருந்து அதிமுகவினா் நழுவிவிட்டனா். அக்கூட்டணியில் எத்தனை போ் சோ்ந்தாலும் திமுகவை அசைத்துக் கூட பாா்க்க முடியாது. இக்கூட்டணியின் மூலமாக திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை அமித்ஷாவே ஏற்படுத்தியுள்ளாா். எனவே, வரலாற்றில் அதிமுகவின் கடைசி அத்தியாயம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சொல்லலாம் என்றாா் வீரமணி
Next Story

