கல்லூரி களப்பயணம் -2025-னை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி களப்பயணம் -2025-னை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சிரயர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி களப்பயணம் -2025-னை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வமூட்டும் விதமாக கல்லூரி களப்பயணச் செயல்பாடுள் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 88 அரசு பள்ளிகளிலிருந்து 4,642 மாணவர்கள் மருத்துவக் கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, கலை & அறிவியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, துணை செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் கல்வியியல் கல்லூரி போன்ற 20 கல்லூரிகளுக்கு களப்பயணத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். மாணவர்கள் தங்கள் களப்பயணத்தின் போது கல்லூரியின் வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், ஆய்வகங்கள், நூலகம், விடுதி அறைகள் மற்றும் உணவு கூடம் ஆகியவற்றை பார்வையிட்டனர். இக்களப்பயணத்தின் மூலம் மாணவர்கள் கல்லூரியில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கல்லூரியில் உள்ள இளங்கலை படிப்புகள், உதவித் தொகை திட்டங்கள், போட்டித் தேர்வுகள், வேலை வாய்ப்புகள், கல்லூரியில் நடைபெறும் கல்விசாரா நிகழ்வுகள், கலாச்சார கொண்டாட்டங்கள், விளையாட்டு வசதிகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சான்றிதழ் படிப்புகள், கூடுதல் பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. மேலும் உயர்கல்வியில் சேர்ந்து பயில மாணவர்களை ஊக்குவிக்கவும், கல்லூரிகள் குறித்து மாணவர்களுக்கு உள்ள பயத்தை நீக்குவதற்கும், தங்களுடைய எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள தேவையான வழிகாட்டுதலை பெறவும் இக்களப்பயணம் உதவியாக அமையும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, உதவித் திட்ட அலுவலர் மற்றும் தலைமையாசிரியர், பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story