வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்.
NAMAKKAL KING 24X7 B |10 Nov 2025 7:24 PM ISTநாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக, நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பார்வையிட்டார். இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவு மற்றும் 1950 ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 21 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிற பொருத்தக்கூடிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2026-ஐ தகுதியேற்ப்பு நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினை அறிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 92-இராசிபுரம், 93-சேந்தமங்கலம், 94-நாமக்கல், 95-பரமத்திவேலூர், 96-திருச்செங்கோடு, 97-குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 04.11.2025 முதல் வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, இப்பணி 04.12.2025 வரை நடைபெறவுள்ளது. இப்பணிகளில், அங்கன்வாடி பணியாளர்கள், எழுத்தர் பணியாளர்கள் (நகர்புறம்), ஒப்பந்த ஆசிரியர்கள், மதிய உணவு பணியாளர்கள், ஊராட்சி செயலாளர், ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர், கிராம அளவிலான பணியாளர்கள் என மொத்தம் 1,629 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நேரடியாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்தல் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வாக்காளர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுவினர் வரைந்த ரங்கோலி கோலத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.விமலா மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர்கள் வே.சாந்தி (நாமக்கல்), பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.ஏ.சுரேஷ்குமார் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.
Next Story



