பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக காரில் கடத்திய 250 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்

பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக காரில் கடத்திய 250 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்
X
போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்
பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக காரில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்வதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அழகாபுரம் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்று நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது, அந்த காரில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். டிரைவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். தொடர்ந்து காரில் போலீசார் சோதனை செய்தபோது, 27 மூட்டைகளில் 250 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் ராஜஸ்தான் மாநிலம் பாரி மாவட்டத்தை சேர்ந்த பஜன்லால் (வயது 25) என்பதும், அவர் பெங்களூருவில் இருந்து காரில் சேலம் வழியாக மதுரைக்கு குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பஜன்லாலை போலீசார் கைது செய்தனர். மேலும் கார், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடியவர்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்?, அவர்களுக்கு புகையிலை பொருட்கள் சப்ளை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story