கூட்டுறவு சங்கத்தில் ரூ.29 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
தர்மபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி கோபிநாதம்பட்டி கூட்ரோடு, புதுப்பட்டி, இருளப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள். இந்த வாரம் நடந்த பருத்தி ஏலத்தில் 210 விவசாயிகள், 890 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். இந்தநிலையில் நேற்று ஆர்.சி.எச். ரக ரக பருத்தி குவிண்டால் ரூ.5,990 முதல் 7,629-க்கும், டி.சி.எச். பருத்தி ரூபாய் 9,609 முதல் ரூபாய் 10,090-க்கும் ஏலம் போனது. நேற்று ரூபாய் 29 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது என்று செயலாளர் அறிவழகன் தெரிவித்தனர்.
Next Story




