கன்னியாகுமரியில் 3 நாட்கள் படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு 

கன்னியாகுமரியில் 3 நாட்கள் படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு 
X
சுற்றுலா
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் மற்றொரு பார்வையில் 133 அடி உயர திருவள்ளூர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றைக் காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகின்றனர்.        இவற்றை பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் 3 படகுகளை இயக்கி வருகிறது. இந்தப் படகுகள் தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி இயக்கப்படுவது வழக்கம்.          இந்த நிலையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை மற்றும் சபரிமலை மகர விளக்க பூஜையொட்டி அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருவதால் விவேகானந்தர் மன்றம் மற்றும் திருவள்ளுவர் சிலையை கண்டுக்களித்து செல்ல வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நேற்று முதல் நாளை வரை 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் படகு போக்குவரத்து நேரத்தை நீட்டிப்பு செய்துள்ளது. அதன்படி இந்த மூன்று நாட்களும் படகு சேவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவேளை இன்றி இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Next Story