மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்!

மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்!
X
குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரியில் மணல் கடத்திய 3 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரியில் இருந்து மணல் கடத்துவதாக குடியாத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஜே.சி.பி இயந்திரம் மூலம் மண் எடுத்து லாரியில் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story