அரியலூர் மாவட்டத்தில் 3 ஆவது நாளாக நியாய விலைக் கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டத்தில் 3 ஆவது நாளாக நியாய விலைக் கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர், ஏப்.25- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைப் பணியாளர்கள் 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடும்ப அட்டைதாரர் விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு 40}லிருந்து 90 சதவீதம் உயர்த்தியதை ரத்து செய்து மீண்டும் 40 சதவீத விரல் ரேகைப் பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும். இணையதள சேவையை மேம்படுத்தப்பட வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும்.அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் எடையாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 22 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர், 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.இதில் அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.அரங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இரா.லெனின், பொருளாôளர் இருதயராஜ், மாவட்ட அமைப்பச் செயலர் சவேரியார், ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
Next Story