நாமக்கல்லில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு!

நாமக்கல்லில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு!

 தி.மு.க.

நாமக்கல் தொகுதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் V.S.மாதேஸ்வரனை கூட்டணி கட்சியினர் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தனர்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக தேர்தல் தலைமை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. நாமக்கல் - சேலம் ரோடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் பணிமனையை நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N.ராஜேஷ்குமார் MP, தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான E.R.ஈஸ்வரன் MLA , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் MLA, ஆகியோர் திறந்து வைத்து உரையாற்றினார்கள். இதில் நாமக்கல் தொகுதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் V.S.மாதேஸ்வரனை கூட்டணி கட்சியினர் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தனர். இந்த நிகழ்வில் இந்தியா கூட்டணியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story