பரமத்தி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்.

பரமத்தி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் பயாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கப்பட்டது.
பரமத்தி வேலூர்,ஆக:27- நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட 5 ஊராட்சிகளை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி பரமத்தி அருகே உள்ள நடந்தையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பரமத்தி வேலூர் வட்டாட்சியர் முத்துக்குமார் தலைமை வகித்தார். பரமத்தி ஒன்றிய தி.மு.க செயலாளர் தனராசு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பரமத்தி வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் 14 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா,4 நபர்களுக்கு மகளிர் சுய உதவிக்குழு கடன்,3 நபர்களுக்கு முதல்வர் காப்பீட்டு அட்டை,1 நபருக்கு மின்சார இணைப்பு பெயர் மாற்றம் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள்,அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story