கரூர் மாவட்டத்தில் 38.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
Karur King 24x7 |29 Sep 2024 4:17 AM GMT
கரூர் மாவட்டத்தில் 38.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 38.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழக உள் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் தொடர்ந்து 4,5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. இதன் அடிப்படையில் நேற்று இரவு கரூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை பெய்தது.மழை பெய்த நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் அதிகபட்சமாக தோகைமலையில் 27.20 மில்லி மீட்டர், குளித்தலையில் 9.20 மில்லி மீட்டர், பாலவிடுதியில் 2- மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் 38.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது எனவும், இதனுடைய சராசரி அளவு 3.20 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Next Story