சென்னையில் கடும் பனிமூட்டம்: 40-க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு

சென்னையில் கடும் பனிமூட்டம்: 40-க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு
X
சென்னை விமான நிலை​யத்​தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்​கப்​பட்டன.
சென்னை விமான நிலைய பகுதி​யில் நேற்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால், லண்டனிலிருந்து 317 பயணி​களுடன் சென்னை வந்து கொண்​டிருந்த பிரிட்​டிஷ் ஏர்வேஸ் விமானம், மஸ்கட்​டிலிருந்து 252 பயணி​களுடன் வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை பெங்​களூரு​வுக்​கும் மற்றும் ஐதரா​பாத்​திலிருந்து 162 பயணி​களுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், புனே​விலிருந்து 152 பயணி​களுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை திரு​வனந்​த​புரத்​துக்​கும் திருப்பி அனுப்​பப்​பட்​டுள்ளன. குவைத்​திலிருந்து 148 பயணி​களுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்​பிரஸ் விமானம் உட்பட சில விமானங்​கள், சென்னை​யில் தரையிறங்க முடி​யாமல் வானில் வட்டமடித்​துக் கொண்டு இருந்தன. அதேபோல், சென்னையி​லிருந்து டெல்லி, மதுரை, கோவை, தூத்​துக்​குடி, விஜய​வாடா, அந்த​மான், லண்டன், சிங்​கப்​பூர், துபாய் உள்ளிட்ட பகுதி​களுக்கு செல்​லும் 25-க்​கும் மேற்​பட்ட விமானங்கள் தாமதமாக புறப்​பட்டு சென்றன. வானிலை சீரானதும் வானில் வட்டமடித்​துக் கொண்​டிருந்த விமானங்கள் மற்றும் மற்ற நகரங்​களுக்கு திருப்​பி​விடப்​பட்ட விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்னை​யில் தரையிறங்​கின. பனிமூட்டத்தால் சென்னை விமான நிலை​யத்​தில் அதிகாலை 5.30 மணியி​லிருந்து காலை 9 மணி வரை 40-க்​கும் மேற்​பட்ட வருகை, புறப்​பாடு விமானங்​கள், 2 மணி நேரத்​திலிருந்து 5 மணி நேரம் வரை ​தாமத​மாகிய​தால் ஆ​யிரக்​கணக்கான பயணி​கள் கடும் அவ​திக்​குள்​ளாகினர்​.
Next Story