கரூர் மாவட்டத்தில் 43.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு .
கரூர் மாவட்டத்தில் 43.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கி உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. கரூரிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. இந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கரூரில் 7.20 மில்லி மீட்டர் மாவட்டத்தில் அதிகபட்சமாக க.பரமத்தியில் 11.40 மில்லி மீட்டர் தோகை மலையில் 4 மில்லி மீட்டர் கிருஷ்ணராயபுரத்தில் 8 மில்லி மீட்டர் மாயனூரில் 6 மில்லி மீட்டர் பஞ்சபட்டியில் 2.40 மில்லி மீட்டர் பாலவிடுதியில் 4 மில்லி மீட்டர் என மொத்தம் 43 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது . இதனுடைய சராசரி அளவு 3. 58 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story



