கடலூர்: 44, 689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

X
கடலூரில் நடைபெற்ற அரசு விழாவில், 386 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 44, 689 பயனாளிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த விழாவில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வெ. கணேசன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், சபா. இராஜேந்திரன், தி. வேல்முருகன், இராதாகிருஷ்ணன், சிந்தனைச்செல்வன், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story

