வாணியம்பாடி அருகே சுங்க சாவடியில் சொகுசு காரில் கடத்தப்பட்ட 500 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே சுங்க சாவடியில் சொகுசு காரில் கடத்தப்பட்ட 500 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சுங்க சாவடியில் சொகுசு காரில் கடத்தப்பட்ட 500 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது அம்பலூர் காவல்துறையினர் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்க சாவடியில் அம்பலூர் காவல்துறையினர் வாகனதணிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடைச்செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது, அதனை தொடர்ந்து, காரில் இருந்த நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்ட போது, அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் சிங் மற்றும் ரமேஷ் குமார் என்பதும், கர்நாடக மாநிலத்திலிருந்து சென்னையிற்கு 500 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா போதை பொருட்கள் கடத்தி செல்வதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது, அதனை தொடர்ந்து, 500 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்காவை பறிமுதல் செய்த அம்பலூர் காவல்துறையினர், சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்திய தீலிப்சிங், ரமேஷ்குமாரை காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் மீது வழக்குபதிவு செய்து, சிறையில் அடைத்தனர்...
Next Story