ஏ.டி.எம்.அறையில் கிடந்த 50,000. ரூபாய் பணத்தை போலீசில் ஒப்படைத்த அரசு பள்ளி 7ம் வகுப்பு மாணவர்

X
Komarapalayam King 24x7 |16 Nov 2025 6:43 PM ISTகுமாரபாளையம் அருகே அரசு பள்ளி 7ம் வகுப்பு மாணவர், ஏ.டி.எம்.அறையில் கிடந்த 50,000. ரூபாய் பணத்தை எடுத்து போலீசில் ஒப்படைத்தார்.
குமாரபாளையம் அருகே வளையக்காரனூர் பகுதில் வசிப்பவர்கள் கார்த்திகேயன், 38, புனிதா, 34. கட்டிட கூலி வேலை. இவர்களுக்கு ஜினார்த், 13, தங்கை மது வர்ஷா, 19. உள்ளனர். இருவரும் குமாரபாளையம் அருகே உள்ள சங்கர் சிமெண்ட் ஆலை வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சங்கர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். ஜினார்த், 7ம் வகுப்பும், மதுவர்ஷா, 4ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இவர்கள் நால்வரும் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் உள்ள வட்டமலை பகுதியில் உள்ள, தனியார் ஏ.டி.எம்.இல் நேற்று இரவு 07:30 மணி சுமாருக்கு பணம் எடுக்க சென்றனர். ஏ.டி.எம். அறையில் ஜினார்த் மட்டும் சென்று பணம் எடுக்கும் பணியை செய்தான். அப்போது ஏ.டிஎம் மெசின் அருகில் இரசீது கிழித்து போட வைக்கப்பட்ட குப்பை தொட்டியில் 50,000. ரூபாய் பண்டல் சீல் உடைக்கப்படாமல் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதை.. வெளியில் நின்ற தன் அப்பா வசம் எடுத்து கொடுக்க.. அவர்கள் குடும்பத்துடன் வந்து போலீசில் பணத்தை ஒப்படைத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட எஸ்.எஸ்.ஐ. மாதேஸ்வரன் இந்த சிறுவனுக்கு சால்வை அணிவித்து, புத்தகம் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார். போலீசார் அனைவரும் பாராட்டினர். . இந்த மாணவனுக்கும்,குடும்பத்தாருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது. .. இதற்கு கே.எம்.ஆர்.டி. பொது நல அமைப்பை சேர்ந்த கணேஷ் உதவி செய்தார்.
Next Story
