திருப்பரங்குன்றம் உண்டியலில் 51 கிராம் தங்கம்.

X
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதனடிப்படையில் இந்த மாதத்திற்கான உண்டியல் இன்று (ஜன.24) திறந்து எண்ணப்பட்டது. அதில் ரொக்கம் ரூ.34 லட்சத்து, 52 ஆயிரத்து 949 ரூபாய், தங்கம் 51 கிராம், மற்றும் வெள்ளி 2 கிலோ 10கிராம் இருந்தது. திருப்பரங்குன்றம் கோயில் கண்காணிப்பாளர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story

