வாந்தி-வயிற்றுவலி உபாதையால் மேலும் 6 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

வாந்தி-வயிற்றுவலி உபாதையால் மேலும் 6 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
X
மருத்துவமனை
கும்பகோணம் மருத்துவமனையில் மேலும் 6 மாணவ மாணவிகள் வாந்தி- வயிற்றுவலிக்கான சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட் டனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நீலத் தநல்லூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சத்யா (15), ஸ்ரீராம் ( ஹாசினி (10), அஜிதா (13), தர்ஷினி (10), சங்கவி(9) ஆகிய 6 மாணவ, மாணவிகள், வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டதால் செவ்வாய்க்கிழமை பகலில் கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அதே தெருவைச் சேர்ந்த சஞ்சனா (7), புகழினி (5), பைரவி (7), தீபக் (10), சரோஜினி (13), துரைமுருகன் (13) ஆகியோர் கும்பகோணம் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 12 மாணவ, மாணவிகள் ஒரேநாளில் அனுமதிக்கப்பட்டதால் நீலத்தநல்லூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் செல்வக்குமார் தலைமையில் மருத்துவக் குழுவினர், மாணவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மருத்துவ அலுவலர் ஒருவர் கூறியது: சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 12 மாணவ மாணவிகளில் 11 பேருக்கு மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான சிகிச்சைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றார். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஒருவர் கூறும் போது, நீலத்த நல்லூர் தெற்கு தெருவில் கருங்காடு வாய்க்காலில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனருகே குடிநீர் விநியோகம் செய்யும் குழாய்கள் உள்ளன. இதன்மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளது. இதை தடுக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கொத்தங்குடி சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட குழுவினர் ஊராட்சி தண்ணீர் தொட்டி உள்ளிட்டவற்றில் ஆய்வு நடத்தினர்.
Next Story