பழைய கோட்டை மாட்டுத்தாவணியில் ரூ 7 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

X
நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான வாரச் சந்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்று வருகிறது. இதில் திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மயிலை செவலை மாடுகள், காரி பூச்சி மாடுகள், இளங்கன்றுகள் என மொத்தம் 36 மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினையுடன் காங்கேயம் இன மயிலை பசு மாடு 73 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 20 காங்கேயம் இன மாடுகள் ரூ 7 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
Next Story

