நாட்டு நலப் பணித் திட்ட 7 நாட்கள் சிறப்பு முகாம்

வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் மரக்கன்று நட்டு வைத்தார்
நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த கிராமத்துமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி சார்பில், நாட்டு நலப் பணித் திட்ட 7 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வருகிற அக்டோபர் 3 -ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறும்  முகாமில். மருத்துவம், கல்வி மற்றும் சமூக நல சேவைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளது. முகாம் தொடக்க விழாவில், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் அ.ஆல்பர்ட் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, பள்ளி நிர்வாக தந்தை ஐ.ஆரோக்கிய வினிட்டோ, பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் எம்.ரெக்ஸ் அலெக்ஸாண்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக, வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஏ.டயானா சர்மிளா கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வாழ்த்துரை வழங்கினார். கிராமத்துமேடு முன்னாள் ஊராட்சி தலைவர் ச.முருகானந்தம் தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.
Next Story