கரூர் மாவட்டத்தில் 78.80 மில்லிமீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 78.80 மில்லிமீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக குறிப்பிட்ட சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று இரவு பெய்த மழை நிலவரம் குறித்த மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குளித்தலையில் 5.20 மில்லி மீட்டர், தோகைமலையில் 2.00 மில்லி மீட்டர் , கிருஷ்ணராயபுரத்தில் 8.50 மில்லி மீட்டர் , மாயனூரில் 10.00 மில்லி மீட்டர் , பஞ்சபட்டியில் 4.60 மில்லி மீட்டர் , கடவூரில் 10.50 மில்லி மீட்டர், மாவட்டத்தில் அதிகபட்சமாக பால விடுதியில் 22.00மில்லி மீட்டர் , மைலம்பட்டியில் 16.00 மில்லி மீட்டர் என மொத்தம் 78.80 மில்லி மீட்டர் மழை அளவு ⁹௬பதிவானதாகவும் இதனுடைய சராசரி அளவு 6.57 மில்லி மீட்டர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story




