உணவில் பல்லி: 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!

உணவில் பல்லி: 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!
X
மணப்பாடு அருகே உள்ள பள்ளி விடுதியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
மணப்பாடு அருகே உள்ள பள்ளி விடுதியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கிராமத்தில் புனித வளன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதியில் 8 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு மாணவர்களுக்கு தோசையும், தக்காளி சட்னியும் வழங்கப்பட்டது.  இந்த தக்காளி சட்னியில் பல்லி கிடந்துள்ளதை கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற
Next Story