கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பழனி முருகன் கோவிலுக்கு ரூ.8.14 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்

X
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பழனி முருகன் கோவிலுக்கு ரூ.8.14 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 681 நாட்டு சர்க்கரை மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் 60 கிலோ மூட்டை முதல் தர திடம் ரக நாட்டு சர்க்கரை ரூ.2 ஆயிரத்து 850-க்கு ஏலம் போனது. மீடியம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 580-க்கும், அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்து 630-க்கும் விற்பனையானது. மொத்தம் 3 ஆயிரத்து 135 மூட்டைகளில் உள்ள 1 லட்சத்து 88 ஆயிரத்து 100 கிலோ எடையுள்ள நாட்டு சர்க்கரை ரூ.81 லட்சத்து 64 ஆயிரத்து 370-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 50 மூட்டைகளில் உள்ள 1,500 கிலோ எடை உருண்டை வெல்லம் ரூ.82 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. மொத்தமாக நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் ரூ.82 லட்சத்து 46 ஆயிரத்து 870-க்கு பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் நிர்வாகத்தினர் கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
Next Story

