ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி ஊராட்சி

X

ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி ஊராட்சி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னல்சித்தாமூர் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் வசந்தா அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, அவர்கள் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் வசந்தா கோகுலக்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் பொன்மலர் சிவக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story