போலி பாஸ்போர்ட் வழக்​கில் திண்டுக்கல் காவல் ஆய்வாளர் உட்பட 9 பேருக்கு சிறை தண்டனை

போலி பாஸ்போர்ட் வழக்​கில் திண்டுக்கல் காவல் ஆய்வாளர் உட்பட 9 பேருக்கு சிறை தண்டனை
X
Dindigul
மதுரை​யில் 2009-ல் பலருக்கு போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் நடத்​திய விசாரணை​யில், 22 பேருக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்​டது உறுதி​யானது. இதையடுத்​து, மதுரை மண்டல அலுவல​கத்​தில் பணிபுரிந்த உதவி பாஸ்போர்ட் அதி​காரி கீதாபாய், உதவியாளர் அன்பழகன், *திண்​டுக்​கல் பேகம்பூர் தபால்காரர் செல்வதுரை, திண்டுக்​கல் தெற்கு டவுன் காவல் ஆய்வாளர் தங்கவேலு, திண்டுக்கல் காவல் கண்காணிப்​பாளர் அலு​வல​கப் பணியாளர் சுரேஷ்பாபு,
முகவர்​கள் இப்ராஹிம் மீரான், பக்​ருதீன், ஷாஜகான், சுனிதா பானு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்​பட்​டது. இந்த வழக்கை விசாரணை செய்த சிபிஐ நீதிமன்றம் முகவர்​கள் பக்​ருதீன், ஷாஜ​கான் மற்றும் செல்​வதுரை, சுரேஷ்பாபு ஆகியோருக்கு 4 ஆண்​டு​கள் சிறை தண்​டனை​யும், தலா ரூ.80 ஆயிரம் அபராதமும், உதவி பாஸ்போர்ட் அதி​காரி கீதா​பாய், இப்​ராகிம் மீரான், சுனிதா பானு ஆகியோ​ருக்கு 3 ஆண்​டு​கள் சிறை தண்​டனை​யும், தலா ரூ.70 ஆயிரம் அபராதமும், அன்​பழகன், காவல் ஆய்​வாளர் தங்கவேலு ஆகியோ​ருக்கு 2 ஆண்​டு​கள் சிறை தண்​டனை​யும், தலா ரூ.40 ஆயிரம் அபராத​மும் விதித்து நீதிபதி சண்​முகவேல் தீர்ப்​பளித்​தார்
Next Story