நாமக்கல் A.S.பேட்டை ஸ்ரீ சக்தி கணபதி ஆலயத்தில் 32ம் ஆண்டு விழா!

நாமக்கல் - A S.பேட்டை ஸ்ரீ சக்தி கணபதி ஆலயத்தில் 32ம் ஆண்டு விழாவை முன்னிட்டு , ஸ்ரீ சக்தி கணபதிக்கு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .
நாமக்கல் ஏ.எஸ். பேட்டை ஸ்ரீ சக்தி கணபதி ஆலயத்தில் 32 ம் ஆண்டு விழா நடந்தது. கணபதிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை சக்தி விநாயகர் கோவில், 32 ஆண்டு விழாவை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகம் வேள்வி மற்றும் மகா தீபாராதனையும் நடந்தது. பிறகு ஸ்ரீ சக்தி கணபதிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பகல் 12 மணிக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை இணை அமைச்சர் செ.காந்திசெல்வன், நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி, நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அருள், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story