கோவை: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை- KC பழனிச்சாமி குற்றச்சாட்டு !

X
கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் KC. பழனிச்சாமி அவரது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் காங்கயம் தொகுதிகுட்பட்ட பல பகுதிகளில் வெறிநாய்களால் விவசாயத்தோட்டங்களில் கடந்த நான்காண்டு 3000 மேற்பட்ட ஆடுகள் கொல்லபட்டிருப்பதாகவும், வெறிநாய் கடிகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஆயிரம் கோடி ஒதுக்கப்படதாகவும், அந்த தொகையை யாருக்கு ஒதுக்கி கொண்டார்கள் என தெரியவில்லை எனவும் விவசாயிகள் யாருக்கும் தரவில்லை,இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு, மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த நிலையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், இன்று சென்னிமலையில் நடந்த போராட்டம் தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த அமைச்சர் சாமிநாதன் குறைந்த பட்சம் தொலைபேசியில் கூட தொடர்பு கொண்டு கேட்கவில்லை எனவும் அமைச்சர் முத்துச்சாமியை மாவட்ட ஆட்சியர் மூலம் அழைத்து பேசி இருப்பதாகவும்,மாவட்ட ஆட்சியர் மூலம் இழப்பீடு வழங்க வேண்டும், இதுபோல் நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Next Story

