வேலூரில் 108 கிலோ குட்கா பறிமுதல்

வேலூரில் 108 கிலோ குட்கா பறிமுதல்

கைது செய்யப்பட்டவர் 

வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட போலீசாரின் சோதனையில் கள்ள சந்தையில் விற்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் மற்றும் குட்கா உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது 197 மது பாட்டில்கள், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 100 கிராம் கஞ்சா, சுமார் 108 கிலோகிராம் எடையுள்ள குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்,இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story