செஞ்சியில் சிவன் கோவிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேகம்

செஞ்சியில் சிவன் கோவிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேகம்

சங்காபிஷேகம் 

செஞ்சியில் சிவன் கோவிலில் நடைபெற்ற சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் ,செஞ்சி, சிறுகடம்பூர் விசாலாட்சியம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டியும், கோவிலில் திருப்பணிகள் விரைவில் நடக்கவும் 108 சங்காபிஷேகம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதனையொட்டி, காலை 7:00 மணிக்கு காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு கலசம் பிரதிஷ்டை செய்து, 108 சங்குகளுக்கு சிறப்பு வேள்வி நடத்தப்பட்டது.வேள்வி முடிவில் காசி விஸ்வநாதருக்கும், விசாலாட்சியம்மனுக்கு சங்காபிஷேகமும், கலச நீர் கொண்டு மகா அபிஷேக, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story