தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை

எட்டிமடை புதூர் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
திருச்செங்கோடு எட்டிமடை புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் எட்டாம் நாள் திருவிழாவாக அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்து வான வேடிக்கைகளுடன் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பான அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை எட்டிமடை புதூர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண முருகன் சீட்டு குழு பக்தர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்த இனிய விழாவில் ஊர் பொதுமக்களும் பக்த கோடிகளும் கலந்து கொண்டு ஸ்ரீ தேவி கருமாரி அம்பாளின் அருள் பெற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story